Tamil News


சமந்தாவைதான் திருமணம் செய்துகொள்ள்ப் போகிறேன் - ஒப்புக்கொண்ட சித்தார்த்

 சமந்தாவை தான் காதலிப்பதாகவும், விரைவில் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் சித்தார்த்து ஒப்புக்கொண்டுள்ளார்.

சித்தார்த் - சமந்தா காதல் ஊருக்கே தெரிந்த விஷயம் தான் என்றாலும் இதை அவர்கள் எப்போதும் போல இது வெறும் நட்புதான் என்று கூறிவந்தார்கள். இந்த நிலையில் இருவரும் தங்களது குடும்பத்தாருடன் சமீபத்தில் காலஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக சென்று சாமி கும்பிட்டார்கள். இதன் மூலம் சித்தார்த்திடம் நிருபர்கள் தொடர்ந்து இந்த காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப, இறுதியில் சித்தர்த்தோ, ஆமாம் அப்படி இருப்பதால் என்ன தவறு, அது எங்கள் சொந்த விஷயம் என்று கூறி, தனது காதலை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதேபோல சமந்தாவும் தற்போது எந்த புதுப்படங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. சித்தார்த்தும் தனது நெருக்கமானவர்களிடன் இந்த திருமண செய்தியைப் பற்றி பேசி வருகிறாராம்.

இயக்குநர் மகனின் காதலுக்கு நோ சொன்ன ஆண்ட்ரியா

சென்னை, மார்ச் 29 சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல ஆண்ட்ரியா செல்லும் இடம் எல்லாம் ஒரே காதல் பரபரப்பு தான். செல்வராகவன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் காதல், என்று தமிழ் சினிமாவில் அவ்வபோது பரபரப்பு ஏற்படுத்தி வந்த ஆண்ட்ரியா தற்போது மலையாள சினிமாவிலும் காதல் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.

பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகன் பகதுடன், ஆண்ட்ரியா ஜோடி போட்டு நடித்தப் படம் 'அன்னையும் ரசூலும்'. இப்படத்தில் நடிக்கும்ப்போது ஆண்ட்ரியா மீது காதல் கொண்ட பகத், பத்திரிகை ஒன்றில் வெளிப்படையாகவே நான் ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஆண்ட்ரியாவோ இது சம்மந்தமாக மறுப்பு ஏதும் சொல்லாமல் இருந்தார். இதனால் ஆண்ட்ரியாவும் பகத்தை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியாக, தற்போது இது தொடர்பாக ஆண்ட்ரியா முதல் முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து கூறிய ஆண்ட்ரியா, "நான் யாரையும் காதலிக்கவில்லை. என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது. பகத் என்னை விரும்புவதாக கூறியுள்ளார். அது அவர் எண்ணமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எதுவும் இல்லை. நான் அவரை காதலிக்க வில்லை. உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் எனக்கு இல்லை." என்று பகத்தின் காதலுக்கு நோ சொல்லிவிட்டார்.

நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருப்பது உண்மைதான்!- மனம் திறக்கும் ஆர்யா


சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா – ஆர்யா நெருக்கம்தான்.

நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு – நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது.

இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், “நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம். எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது,” என்றார்.

ஹன்சிகாவுக்கு டிப்ஸ் கொடுத்த டான்ஸ் மாஸ்டர்கள்...!!

சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் கவர்ச்சியை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற சூட்சுமம் தெரியாமல் இருந்து வந்தார் ஹன்சிகா. இதனால் ஓரிரு படங்களிலேயே அவருக்கு கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் ஏற்பட்டது. அதன்பிறகு கோலிவுட்டில் உள்ள சில டான்ஸ் மாஸ்டர்களின் நட்பு கிடைத்தபோது, கவர்ச்சி என்பது உடம்பை காட்டுவதில்லை. வித்தியாசமான அசைவுகளில்தான் உள்ளது. அப்படி வெளிப்படுத்தும் கிளாமருக்குத்தான் ஈர்ப்பு அதிகம் என்று அவர்கள் அறிவுறுத்தினார்களாம். அதனால், அந்த மாஸ்டர்களிடம், எந்த மாதிரியான நடன அசைவுகளில் எந்த மாதிரியான கிளாமரை வெளிப்படுத்த முடியும் என்ற வித்தையை பயின்றிருக்கிறார் ஹன்சிகா.

அதையடுத்து, இப்போது தான் கமிட்டாகும் ஒவ்வொரு படங்களிலுமே இந்த வித்தையை பயன்படுத்தி வருகிறார் நடிகை. அதோடு, தனக்கான பாடல்களை தனது அபிமானத்திற்குரிய நடன மாஸ்டர்கள்தான் கம்போஸ் செய்ய வேண்டும் என்றும் கண்டிசனாக பேசும் ஹன்சிகா, முன்கூட்டிய அவர்களிடம் ரிகர்சலும் பார்த்து விட்டுத்தான் ஸ்பாட்டுக்கே வருகிறார். இதனால் முன்பெல்லாம் ஹன்சிகாவை படுகவர்ச்சியாக பார்த்து பழக்கப்பட்ட இளவட்ட ஹீரோக்கள், இப்போது அவர் புல்லும் கவர் பண்ணும் ஆடைகளை உடுத்திக்கொண்டு வந்து, நெளிவு சுழிவுகள் மூலம் கவர்ச்சி போர்சனை பில்லப் செய்வதால், ரசிகர்களை மாதிரி நம்மையும் ஏமாற்றுகிறரே? என்று அவரை எரிச்சலுடன் பார்க்கின்றனர்.

டார்ச்சர் கொடுத்த பாய் பிரண்டை விரட்டியடித்தாரா...?! மனீஷா மறுப்பு

பாலாஜி சகதிவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் மனீஷா. அதையடுத்து சுசீந்திரன் இயக்கியுள்ள ஆதலால் காதல செய்வீர் என்ற படத்தில் நாயகியாக நடித்த அவர், தற்போது கரு.பழனியப்பன் இயக்கி வரும் ஜன்னல் ஓரம் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் நடித்து வந்தபோது, யாரோ ஒரு இளைஞர் தினமும் ஸ்பாட்டுக்கு வந்து மனீஷாவை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாகவும், அவர் மனீஷாவின் முன்னாள் பாய் பிரண்ட் என்றும், மனீஷா தங்கியிருக்கும் இடம் தெரியாததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தொல்லை கொடுப்பதாகவும், மனீஷா இதுப்பற்றி படக்குழுவிடம் புகார் தெரிவித்ததாகவும், அவர்கள் அந்த பையனை விரட்டியத்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மனீஷா மறுத்துள்ளார். இதுகுறித்து போனில் அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், இதுவெறும் வதந்தி தான் என்றும் கூறியுள்ளார்.


சந்தானத்துடன் ஜோடி சேர்ந்தது ஏன்? சந்தியா பதில்



"காதல் படத்தில் அறிமுகமானதால், சந்தியாவுக்கு, "காதல் சந்தியா என்ற பெயர் ஒட்டிக் கொண்டு விட்டது. காதல் படத்துக்கு பின், பல படங்களில் நடித்தாலும், எந்த படமுமே, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, அமையவில்லை. இதனால், மலையாளம், தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தினார். தமிழில்,"இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் என்ற படத்தில், கடைசியாக தலைகாட்டினார். அதற்கு பின், ஆளையே காணோம். இப்போது, நீண்ட இடைவெளிக்கு பின், "யா யா என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இதில், சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறாராம், சந்தியா.

இதுகுறித்து, சந்தியா அளித்துள்ள பேட்டியில், "சந்தானத்துடன் ஜோடியாக நடிப்பது குறித்து, பலரும் ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர். இது, முழுமையான காமெடி படம். இதுவரை, காமெடி படத்தில் நான் நடித்தது இல்லை. எனவே தான், இந்த படத்தில் நடிக்க, சம்மதித்தேன். அதிலும், இந்த படத்தில், எனக்கு, பெண் போலீஸ் வேடம். காமெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறேன் என, கூறியுள்ளார்.

விஷப்பாம்புகளுடன் நடனமாடிய எமி ஜாக்சன்!

இந்திய நடிகைகளை விட ஹாலிவுட் நடிகைகளுக்கு சற்று துணிச்சல் ஜாஸ்தி. அதன்காரணமாக, ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதே இங்குள்ளவர்கள் ஓவர் நெருக்கம் என்று நினைக்கிறபோது, அவர்களோ பெட்ரூம் சீன்களில்கூட சாதாரணமாக நடிப்பார்கள். அதோடு உதட்டு முத்தக்காட்சியெல்லாம் அவர்களுக்கு டீ சாப்பிடுற கதைதான். மேலும், டூ-பீஸ் உடைகளெல்லாம் ரொம்ப சர்வசாதாரணம். அந்த வகையில் டைரக்டர் விஜய் மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனும், ஆங்கிலப்படங்களில் படுகவர்ச்சியாகதத்தான் நடித்து வந்தார். அப்படிப்பட்டவரைத்தான் தமிழில் ரொம்ப டீசன்டாக காண்பித்தார் விஜய். அதனால், தமிழ் சினிமாவுக்கேற்ப இப்போது தன்னை முழுசுமாக மாற்றிக்கொண்டு, பட்டும் படாமலும் கிளாமர் காண்பித்து வருகிறார் எமி.

இந்நிலையில், தாண்டவம் படத்தையடுத்து தற்போது ஷங்கரின் ஐ படத்திலும விகரமுக்கு ஜோடியாக நடித்து வரும் எமி, ஒரு பாடல் காட்சியில் சைனீஸ் நடனமாடியுள்ளார். இந்த நடனத்தில் அவருக்கு பயிற்சி இல்லாதபோதும், சில வாரங்களிலேயே முறையாக பயிற்சி எடுத்து ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருககிறார். மேலும், அந்த பாடல் காட்சியில் எமிஜாக்சனுடன் விஷப்பாம்புகளும் நடனமாடுவது போன்றும் படமாக்கியுள்ளாராம் ஷங்கர். ஆனால் தன்னருகே பல பாம்புகள் நெளிந்து கொண்டு சென்றபோதும் எந்த அச்சமும் இல்லாமல் துணிச்சலாக நடனமாடியிருக்கிறார் எமி. அதையடுத்து, பாம்மைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால் இந்த நடிகைக்கு துளியும் பயமில்லையே என்று எமிஜாக்சனின் தைரியத்தை பெருமையாக பேசி வருகின்றனர் கோலிவுட் அரட்டையாளர்கள்.

கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை! - மோனிகா

"முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம், வர்ணம் படங்களில் நடித்துள்ள மோனிகாவுக்கு, திறமை இருந்தும், தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. "கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற, அவரது பிடிவாதம் தான், இதற்கு காரணமாம். இதனால், இயக்குனர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும், கடும் முயற்சிக்கு பின், தற்போது, "நதிகள் நனைவதில்லை உட்பட, சில தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளன. இந்தப்படம் பற்றி மோனிகா கூறும் போது, "நதிகள் நனைவதில்லை படத்தின் கதை, ஜனரஞ்சகமாகவும், யதர்த்தமாகவும் இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. ஆனால், வலுக்கட்டாயமாக எடுக்கப்படும்,  கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதில், எனக்கு விருப்பமில்லை என்கிறார்.

சினியுலகில் பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயாவின் புது அவதாரம்(டிரைலர் இணைப்பு)

சினியுலகில் முதன்முறையாக நடிகை ஸ்ரேயா தெலுங்கு படமொன்றில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.
தெலுங்கில் உருவாகிவரும் பவித்ரா என்ற படத்தை ஜனார்த்தன் மஹார்ஷி இயக்குகிறார்.

இதில் பவித்ரா என்ற கதாப்பாத்திரத்தில் பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயா நடிக்கிறார். மேலும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை விஸ்வரூபம் ஸ்டைலில் 5 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திராவில் விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்பட 5 இடங்களில் நடக்கிறது.

ஏப்ரல் 6 மற்றும் 7ம் திகதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. விமானம் மூலம் 5 ஊர்களுக்கும் செல்லும் ஸ்ரேயா, அங்கு நடக்கும் விழாவில் படக்குழுவுடன் பங்கேற்கிறார்.

இது பற்றி ஸ்ரேயா கூறுகையில், தமிழ், கன்னடத்தில் சந்திரா படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் பவித்ரா. இந்த இரண்டு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கொண்டவை. அடுத்தடுத்து இதுபோன்ற படங்கள் கிடைப்பது எனது அதிர்ஷ்டம்.

தீபா மேத்தாவின் இயக்கத்தில் மிட்நைட்ஸ் சில்ரன் படத்தில் நடித்தேன். இதுவே எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

இதற்கிடையில் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளி வேடம், மிகவும் சவாலாக அமைந்தது. இப்படத்துக்காக எனக்கு விருது கிடைக்கும் என்கிறார்கள். ரசிகர்கள் படம் பார்த்து பாராட்டினாலே போதும் என்கிறார்.

விஜயகாந்த் மகனுடன் இணையும் துளசி

விஜயகாந்த் தன்னுடைய மகன் பிரபாகரனை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக பல இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஹரியிடம் கதைகேட்ட விஜயகாந்த், அந்த கதை பிடித்துவிட்டதாகவும், தன் மகனை அவரது இயக்கத்தில் அறிமுகப்படுத்தப்போவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஹரி தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.

இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் பிரபாகரன் நடிக்கும் படத்தின் வேலைகளில் தீவிரமாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் பிரபாகரனுக்கு ஜோடியாக ‘கடல்’ படத்தில் அறிமுகமான பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஒப்பந்தமாகியுள்ளதாக கொலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

1980ம் ஆண்டுகளில் விஜயகாந்த், ராதா ஜோடி பல வெற்றிகரமான படங்களை தந்துள்ளது.

அந்த வரிசையில் இந்த ஜோடியும் அந்த வெற்றியை குவிக்கும் என நம்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலம் கடவுளின் கைகளில்: நயன்தாரா


இனி படங்களில் நடிப்பதில்லை என காதல் வேகத்தில் கழன்று போனபின் மீண்டும் திரும்பி வந்தார். சம்பளம் கூடியிருக்கிறது, வசதிகள் இரட்டிப்பாகியுள்ளது, மரியாதைக்கும் குறைவில்லை.
கூடவே வதந்திகளும். குறிப்பாக திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்தார்.

புராண படத்தில் சீதையாக நடித்தபின் கவர்ச்சியாக நடிக்க மறுப்பதாக செய்திகள் வருகிறதே...?

நான் கவர்ச்சியாக நடிப்பேன் என்றோ அப்படி நடிக்க மாட்டேன் என்று எங்கேயும் சொன்னது கிடையாது. நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வதில்லை. கதைதான் அதனை தீர்மானிக்கிறது.


கவர்ச்சியாக நடிப்பதா இல்லையா என்பது குறித்து - உங்கள் கருத்து என்ன?

ஒரு நடிகை எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். கதைக்கு எது தேவைப்படுதோ அதுதான் முக்கியம். கவர்ச்சியோ, குடும்பப்பாங்கான நடிப்போ... கதைக்கு எது தேவைப்பட்டாலும் அதனை தர வேண்டும். கதைதான் முக்கியம். அது பிடித்தால் அது என்ன கேட்கிறதோ அதுபடி நடிப்பேன்.


கவர்ச்சி, குடும்பப்பாங்கான கேரக்டர்... எது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இரண்டுவிதமாகவும் நான் நடித்திருக்கிறேன். கவர்ச்சியாக நடித்த போதும் ரசிகர்கள் ரசித்தார்கள், குடும்பப்பாங்காக வந்த போதும் ரசித்தார்கள். ரசிகர்களுக்கு பிடிக்கிற எல்லாமே ஒரு நடிகைக்கு ஏற்றதுதான்.

இது கதிர்வேலன் காதல் படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரம்?

இதில் உதயநிதியுடன் நடிக்கிறேன். கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்தது. ஐயாவுக்குப் பிறகு இதில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கிறேன்.

தமிழில் அதிகமாக உங்களை பார்க்க முடியவில்லையே

அப்படியெல்லாம் இல்லை. சின்ன இடைவெளி விழுந்தாலும் இப்போது தொடர்ந்து நடிக்கிறேன். விஷ்ணுவர்தன் படத்தில் அஜித் ஜோடியாக நடித்து வருகிறேன். உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதல். ஆர்யாவுடன் ராஜா ராணி.

தெலுங்கில்

சேகர் கம்மூலா இயக்கத்தில் கஹானி ரீமேக்கில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதுதவிர இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

திருமணம்

அதைப்பற்றி நான் யோசிக்கவேயில்லை. வாழ்க்கையில் எதிர்பாராதது நிறைய நடந்துவிட்டன. எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து போய்விட்டன.

எதிர்கால திட்டங்கள்

எதிர்காலம் நம் கையில் இல்லை, கடவுள் கைகளில் இருக்கிறது. கடவுள் நினைக்கிறபடிதான் நடக்கும். அதனால் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை.



காஜல்அகர்வாலின் எம்.பி.ஏ கனவு!


சினிமாவில் நடிகையாவதற்கு முன்பு எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்பதுதான் காஜல்அகர்வாலின் கனவாக இருந்திருக்கிறது. ஆனால் பத்தாவது படித்து வந்தபோது அவர் செய்த சில மாடலிங் படங்கள் அப்போது பொம்மலாட்டம் படத்தை இயக்கயிருந்த பாரதிராஜாவின் கண்களில் பட, நடிப்பதற்கு அழைப்பு விடுத்தார். சாதாரண டைரக்டர் என்றால் அப்போது மறுத்திருப்பாராம் காஜல். பாரதிராஜா படம் என்றதும்தான் குடும்பத்தாரோடு அமர்ந்து விவாதம் நடத்தியிருக்கிறார். அப்போது, பெரிய வாய்ப்பு தேடி வந்திருக்கிறது விட்டுவிட வேண்டாம் என்று நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதன்காரணமாக, காஜலின் படிப்பு பத்தாவதோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.

என்றாலும், எம்பிஏ படிப்பு காஜலின் கனவு என்பதால், எப்படியாவது எம்பிஏ படித்து விட வேண்டும் என்று இப்போது தபால் மூலம் படிப்பை தொடர திட்டமிட்டுள்ளாராம். மேலும், தனது கல்லூரி தாகத்தை தணிக்க கல்லூரி மாணவி வேடங்களில் நிறைய நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் காஜல், அந்த படங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே முன்னுரிமை கொடுத்து வருகிறாராம். அதுமட்டுமின்றி, ஒரு படத்திலாவது எம்பிஏ மாணவியாக நடித்து விட வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக காஜலுக்கு உள்ளதாம். அந்த மாதிரி சந்தர்ப்பம் அமையாதபட்சத்தில், தனது அபிமான டைரக்டர்களிடம் சொல்லி அப்படியொரு வேடம் கேட்கவும் முடிவு செய்திருக்கிறாராம் அவர்.

தலைவா படத்தில் நான்தான் முதன்மை ஹீரோயினி! அமலாபால் கொண்டாட்டம்

விஜய் நடிக்கும் தலைவா படத்தில் முதலில் நாயகியாக கமிட்டானவர் அமலாபால்தான். ஆனால் அதையடுத்து விஜய்யின் மும்பை காதலியாக இந்தி நடிகை ஒருவர் கமிட்டானதால் ஆடிப்போனார் அமலாபால். அதனால் தன்னை ஓரங்கட்டப்பார்க்கிறாரே டைரக்டர் என்று மனசுக்குள் கோபித்துக்கொண்டு, அவரை விட்டு விலகியே நின்றார். அதோடு தலைவா படப்பிடிப்பு முடிந்ததும் அன்று இரவே தெலுங்கு படப்பிடிப்பு உள்ளது என்று சொல்லி ஐதராபாத்துக்கு பறந்து வந்தார். ஆனால் இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும்போது, இந்தி நடிகையின் சீன்கள் எதுவும் படமாக்கப்படவில்லையாம்.

அவருக்கு என்னாச்சு? என்று விசாரித்தபோது, அவர் விஜய்யின் மும்பை காதலியாக நடிப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையோடு முடிந்து விட்டது. ஒரு பாடலும் சில காட்சிகளில் மட்டும்தான் அவர் வருவார் . படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விஜய்யுடன் வரப்போகிறவர் நீங்கள்தான் என்றும் சில உதவி இயக்குனர்கள் சொல்ல, புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார் அமலா. அதோடு, இதுவரை ஆஸ்தான டைரக்டர் விஜய் தன்னை இப்படி ஓரங்கட்டி விட்டாரே என்று உண்மை தெரியாமல் அவர் மீது அதிருப்தியில் இருந்து வந்த அமலாபால், தற்போது சகஜமாக பழகி வருகிறாராம். மேலும், முன்பு தான் தலைவா படத்தில் ஓரங்கட்டப்படுவதாக தனது நட்பு வட்டாரங்களிடம் புலம்பி வந்த நடிகை, இப்போது அவர்களுக்கு போன் போட்டு, தலைவா படத்தில் நான்தான் முதன்மை ஹீரோயினி என்றும் சொல்லி சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்.

அதிரடி ஆக்ஷன் ஹீரோயினி ஆவேன்- லட்டு விசாகா சபதம்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங் அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் வெற்றி கொண்டான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தமன்னா முதன்மை நாயகி என்பதால் அவருக்கு ஒரு கேரக்டர்தான். என்றாலும், அஜீத் படத்தில் நடிக்கிற பப்ளிசிட்டியை செய்து கொண்டே புதிய படங்களுக்கு வித்திடலாம் என்று வரிந்து கட்டிக்கொண்டு திரிகிறார். அப்படி முயற்சி எடுத்து வரும் விசாகா, சில ஆக்சன் பட டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார். அவர்களிடத்தில், எனக்கு நடனத்தை விட சண்டை செய்வதில்தான் கூடுதல் ஆர்வம். இதனால் சினிமாவுக்கு நடிக்க வருவதற்கு முன்பே சினிமாவுக்கு தேவையான சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டுதான் வந்தேன்.ஆனால் என்னைப்பார்த்த யாரும் ஆக்சன் வேடங்களில் நடிக்க வைக்கவில்லை. உனது தோற்றம் மென்மையாக உள்ளது சொல்லி தர மறுத்து விட்டனர். அதனால் எனது தனிப்பட்ட விருப்பத்தை தள்ளி வைத்து விட்டு, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தேன்.

இப்படி சொல்லும் விசாகா, தற்போது எனது உடல்கட்டை ரப் அண்ட் டப்பாக மாற்றியிருக்கிறேன். ஒரு ஸ்டன்ட் மாஸ்டரை வைத்து மீண்டும் பயற்சி எடுத்துள்ளேன் என்று கூறுகிறார். அதனால் தெலுங்கில் அனுஷ்கா, ப்ரியாமணி போன்ற நடிகைகளை வைத்து சில இயக்குன்கள் ஆக்சன் படங்கள் இயக்கி வருவதால், அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்டுள்ளாராம். மேலும், சண்டை பயிற்சியின்போது தான் செய்த சில சாகசங்களையும் வீடியோ எடுத்து அவர்களிடம் காண்பித்தாராம். அதையெல்லாம் பார்த்த இயக்குனர்கள், சரியான சந்தர்ப்பம் வரும்போது அழைப்பதாக கூறியிருக்கிறார்களாம். இதையடுத்து, சினிமாவில் பிரபல ஆக்சன் ஹீரோயினி என்ற பட்டியலில் இடம்பிடிக்காமல் ஓயமாட்டேன் என்று கூறி வருகிறார் விசாகாசிங்.

தமிழுக்கு வருகிறார் ஆஷிதா


தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்த நடிகை ஆஷிதா. "இசக்கி" என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். "இனிது இனிது" படத்தில் நடித்த சரண்குமார் ஹீரோ. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், சசிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் எம்.கணேசன் படத்தை பற்றி சொன்ன தகவல்கள்: "இது கொஞ்சம் வித்தியாசமான கதை. பொதுவாக கதாநாயகியை வில்லன் துரத்துவார், நாயகன் காப்பாற்றுவார். ஆனால் இந்தப் படத்தில் வில்லன், ஹீரோ இருவருமே நாயகியை துரத்துவார்கள். அவர்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஹீரோயின் ஒடுவார்.

வில்லனின் நோக்கம் நாயகியை நேரடியாக அடைய வேண்டும் என்பது ஹீரோவின் நோக்கம் காதலித்து அடைய வேண்டும் என்பது, இருவரின் நோக்கமும் ஒன்றுதான் வழிகள்தான் வேறு. எல்லா ஆண்களுமே தாயையும், உடன் பிறந்த சகோதரியையும் தவிர மற்றவர்களை பாலியல் ரீதியாகத்தான் பார்க்கிறார்கள் என்கிற உண்மையைச் சொல்லும் கதை.

கன்னட படம் ஒன்றில் ஆஷிதாவை பார்த்து விட்டு நடிக்க கேட்டோம். தமிழ் படத்தில் நடிக்கும் ஐடியா இல்லை என்று முதலில் மறுத்தார். பிறகு கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்தார். தமிழில் முக்கிய நடிகையாக வலம் வருவார். மதுரை காரைக்குடி, ஊட்டி, திண்டுக்கல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் பண்றோம்" என்றார்.

பஹத் பாசிலுடன் காதல் இல்லை: சொல்கிறார் ஆண்ட்ரியா


மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஃபஹத். பிரபல இயக்குனர் பாசிலின் மகன். இவரும் ஆண்ட்ரியாவும் "அன்னையும் ரசூலும்" என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த ஃபஹத், தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொன்னார். இதற்கு ஆண்ட்ரியா பதில் ஏதும் கூறாததால் இதனை உண்மை என்றே எல்லோரும் நினைத்தனர். இப்போது ஆண்டரியா ஃபஹத்தின் பேட்டி குறித்து வாய் திறந்திருக்கிறார். அதில் ஃபஹத்துடன் காதல் இல்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். "ஃபஹத்தின் விருப்பம் எதுவாகவும் இருக்கலாம். எனக்கு இதில் சம்மதம் இல்லை. இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

செல்வராகவன், அனிருத் ஆகியோருடனான காதல் தோல்வியில் முடிந்ததால் எப்போதும் விரக்தியான மனநிலையிலேயே ஆண்ட்ரியா காணப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

விஜய் ரெம்ப திறமைசாலி! ஐஸ் வைக்கும் அனுஷ்கா!!


நடிகர் விஜய் உண்மையிலேயே ரொம்ப திறமைசாலி; அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, "அருந்ததீ" படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இவர் தொடர்ந்து தமிழில் "வேட்டைக்காரன்", "வானம்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் "தெய்வ திருமகள்" படத்தில் நடித்து முடித்திருக்கும் அனுஷ்கா, பேட்டியொன்றில் விக்ரமையும், விஜய்யையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அனுஷ்கா கூறுகையில், தெய்வத்திருமகள் மிகவும் வித்தியாசமான படம் இது. 5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட இளைஞனுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்போராட்டத்தை மையமாக கொண்ட கதை. ஆனால் எல்லா பாத்திரங்களுக்குமே சமமான முக்கியத்துவம் உள்ள வகையில் கதை அமைந்திருக்கிறது. படத்தில் நான் வக்கீலாக நடிக்கிறேன். இதுவரை நான் நடித்த பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமானது என்று சொல்லும் வகையில் எனது பாத்திரம் அமைந்துள்ளது. வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனால் அதையும் மீறி அவர் பணிவோடு இருக்கிறார், என்றார்.

No comments:

Post a Comment